பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நடிகர் விஜய் உடன் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், விஜய்யின் அரசியல் வருகைக்கான பேச்சுவார்த்தையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், உள்ளாட்சி தேர்தல் மூலம் விஜய் தனது தொண்டர்களுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார். அடுத்து வரப் போகும் தேர்தலிலும் பச்சைக் கொடி காட்டினால் எல்லாம் நடக்கும் என்று கூறியுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் விஜய் நேரடி அரசியலுக்கு வரக்கூடாது. தமிழக மக்கள் அவரை உச்சத்தில் கொண்டு போய் வைத்திருக்கின்றனர். அதனை சிறிது காலம் அவர் அனுபவிக்க வேண்டும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தாம் சிறு பாதை போட்டுக் கொடுத்ததாகவும், அதை மிகப்பெரிய நெடுஞ்சாலையாக விஜய் மாற்றிக் கொண்டார் என்றும் அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். எதிர்காலத்தில் விஜய் தன்னைவிட வேகமாக அரசியல் குறித்து முடிவெடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் விஜய் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில் தற்போது திமுக ஆட்சியில் அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது என்று நம்புவதாகவும், ஏனென்றால் தற்போதைய ஆட்சி பழிவாங்கும் ஆட்சி இல்லை எனவும் எஸ்.ஏ.சந்திர சேகர் கூறியுள்ளார்.
சமீபத்தில் கூட விஜய் தன்னை அழைத்து ஒருமணி நேரம் பேசினார். அப்போது சில பொதுவான விஷயங்களை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்று எஸ்ஏசி சூசகமாக தெரிவித்துள்ளார்.