நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா- நாகசைதன்யா ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த அக்டோபர் 2-ந்தேதி தாங்கள் சட்டப்படி பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். தங்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பதை அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில், ஊடகங்களில் பலதரப்பட்ட வதந்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், நாகசைதன்யாவுடன் தான் இணைந்து வாழ்ந்து வந்த வீட்டில் இப்போதும் சமந்தாவே வாழ்ந்து வருகிறார். அதனால் அங்கிருந்து வெளியேறியுள்ள நாகசைதன்யா தற்போது புதிய பங்களா ஒன்றை வாங்கியிருப்பதாகவும் அங்கு விரைவில் குடியேறப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், கடந்த ஆண்டில் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸில் ஒரு பங்களா வாங்கினார் நாகசைதன்யா. அதன் கட்டுமான வேலைகள் இன்னும் முடியவில்லையாம். அந்த பங்களா தயாரானதும் அதில் நாகசைதன்யா குடியேறுவார் என்றும் புதிய செய்திகள் வெளியாகியுள்ளன.