இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவின் எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்றது. மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியினை மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இதன் 3வது சீசன் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வந்த நிலையில் கொரோனா 2வது அலை காரணமாக 95வது நாளில் நிறுத்தப்பட்டது. இதனால் டைட்டில் வின்னரை பார்வையாளர்களின் ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்த நிலையில் மலையாள பிக் பாஸ் 4வது சீசனுக்கு பங்கேற்பாளர்கள் தேர்வு நடந்து வருவதாகவும், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களை பற்றிய தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் இணைய தளங்களில் விண்ணப்ப படிவங்கள் வெளியானது.
இது மோசடியானது என்றும், உண்மை என்று நம்பி யாரும் தங்களுடைய விவரங்களை அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும் பிக்பாஸ் 4 சீசன் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்கள் தேர்வை இதுவரை நடத்தவில்லை என்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அறிவித்து உள்ளனர். அதோடு இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.