ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி |
மலையாள திரையுலகில், சக போட்டியாளர்களாக கருதப்படும் நடிகர்கள், நிஜ வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் ஈகோ பார்க்காமல் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பரிமாறிக் கொள்வதும், முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுகூடி தங்களது சந்தோசங்களை பரிமாறிக் கொள்வதுமாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், மலையாள சினிமாவில் இளம் நடிகர்களில் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும், பிரித்விராஜ், துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகிய மூவரும், தங்களது நட்பு வட்டத்தை ரொம்பவே பேணி காத்து வருகிறார்கள். அதற்கு மிக முக்கியமாக, பின்னணியில் இவர்களது மனைவிமார்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
அப்படி சமீபத்தில் அவர்கள் தங்களது மனைவியருடன், ஒரு கெட் டுகெதர் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் ஒன்றை பஹத் பாசிலின் மனைவியான நடிகை நஸ்ரியா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகிவருகிறது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து எல்லாம் எந்த விவரத்தையும் நஸ்ரியா வெளியிடாததால், ரசிகர்களின் பார்வைக்காக மட்டுமே இதை வெளியிட்டுள்ளார் என்று தெரிகிறது. அந்த வகையில் இந்த மூவரின் ரசிகர்களும் இவர்களது நட்பை பார்த்து ஆச்சரியப்பட்டு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்