ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

இதுநாள் வரை தெலுங்கு திரையுலகில் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக நடைபெற்று வந்த நடிகர் சங்கத் தேர்தல், இந்த முறை கிட்டத்தட்ட மும்முனை போட்டிகளால் களைகட்ட தொடங்கியுள்ளது. விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ், இளம் நடிகர் மஞ்சு விஷ்ணு, மற்றும் சீனியர் நடிகை ஜீவிதா ராஜசேகர் ஆகியோர் போட்டியிட இருக்கிறார்கள்.
இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தலைமையின் கீழ், கிட்டத்தட்ட 27 பேர் கொண்ட வலுவான கூட்டணியை உருவாக்கியிருக்கிறார். தனது குழுவில் இணைந்து போட்டியிட இருக்கும் உறுப்பினர்களையும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்
சீனியர் நடிகை ஜெயசுதா, நடிகர் சாய்குமார், ஸ்ரீகாந்த், நாகிநீடு அனசுயா, பிரகதி, பிரம்மாஜி என பல பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ்ராஜ் தலைமையில் போட்டியிட உள்ளனர். இதில் நடிகர் சாய்குமார் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடுவார் என்று தெரிகிறது.