நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள படம் மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம் .150 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ள இந்த படம் கடந்த 2 வருடமாக கொரோனா கால ஊரடங்கால் முடங்கி உள்ளது. இதனால் அதன் தயாரிப்பாளருக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படம் ஓணம் பண்டிகை தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி, 600 திரைகளில் வெளியிடப்பட்டுகிறது. இதற்காக படத்தின் தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்கள் சங்கம், மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்.
படம் வெளியான 3 வாரங்கள் வரையில் வேறு எந்த படமும் தியேட்டரில் திரையிடப்படக்கூடாது. என்பதே அந்த ஒப்பந்தம். கேரளாவில் மூடப்பட்டிருக்கும் தியேட்டர்கள் திறக்கப்படும்போது மக்களை தியேட்டருக்கு கொண்டு வர இந்த படத்தால் தான் முடியும் என்பதால் இதற்கு இரண்டு சங்கங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. 3 தேசிய விருதுகள் பெற்றுள்ள இந்த படம் மலையாள சினிமாவின் கவுரவமாக பார்க்கப்படுகிறது.