நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மலையாள ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு படத்திற்கு இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளது. இந்த நான்கு பாகங்களிலும் சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார். நான்கு பாகங்களுக்குமே கதாசிரியர் எஸ்.என்.சுவாமி கதை எழுத, இயக்குனர் கே.மது இந்த படங்களை இயக்கியிருந்தார். இந்தநிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு இந்தப்படத்தின் ஐந்தாம் பாகம் துவங்குவதற்கான வேலைகள் வேகமெடுத்திருக்கின்றன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இந்தப்படத்தின் இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜேக்ஸ் பிஜாய், “மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்த சிபிஐ படத்தின் 5ஆம் பாகத்திற்கு இசையமைப்பதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறன்” என கூறியுள்ளார்..
தமிழில் துருவங்கள் பதினாறு, மாபியா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜேக்ஸ் பிஜாய். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும் படத்தில் இவரது இசையில் இடம்பெற்ற 'களக்காத்தா சந்தனமேரா' என்கிற பாடல் ரசிகர்களிடையே வெகு பிரபலமானது குறிப்பிடத்தக்கது.