கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
பழம்பெரும் தெலுங்கு காமெடி நடிகை பவள சியாமளா. சுவரணகமலம், பாபாய் ஓட்டல், கோதண்ட ராமுடு, இந்திரா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த 2019ல் மதுவடலரா படம் வெளியானது. இதுதான் அவர் நடித்த கடைசி படம்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் இன்றி இவர் அவதிப்பட்டார். தற்போது அவர் வறுமையில் வாழ்ந்து வருகிறார். அவரது கணவரும் இறந்து விட்டார். ஒரே மகளும் நோய்வாய்பட்டுள்ளார். இதனால் தான் வறுமையில் வாடுவதாகவும், மருந்து வாங்ககூட பணம் இன்றி தான் பெற்ற விருதுகளை விற்று மருந்து வாங்கி வருவதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த தகவலை கேள்பிப்பட்ட சிரஞ்சீவி, பவள சியாமளாவிற்கு 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்தின் மூலம் அவருக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். சிரஞ்சீவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.