துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பழம்பெரும் தெலுங்கு காமெடி நடிகை பவள சியாமளா. சுவரணகமலம், பாபாய் ஓட்டல், கோதண்ட ராமுடு, இந்திரா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த 2019ல் மதுவடலரா படம் வெளியானது. இதுதான் அவர் நடித்த கடைசி படம்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் இன்றி இவர் அவதிப்பட்டார். தற்போது அவர் வறுமையில் வாழ்ந்து வருகிறார். அவரது கணவரும் இறந்து விட்டார். ஒரே மகளும் நோய்வாய்பட்டுள்ளார். இதனால் தான் வறுமையில் வாடுவதாகவும், மருந்து வாங்ககூட பணம் இன்றி தான் பெற்ற விருதுகளை விற்று மருந்து வாங்கி வருவதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த தகவலை கேள்பிப்பட்ட சிரஞ்சீவி, பவள சியாமளாவிற்கு 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்தின் மூலம் அவருக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். சிரஞ்சீவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.