300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோவாக வளர்ச்சி அடைந்தவர் தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. முன்னணி இயக்குனர்களின் சாய்ஸாக இருக்கும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் டைரக்சனில் இந்தியில் உருவாகும் 'லிகர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் தன்னை கதாநாயகனாக நடிக்க அணுகிய, சிரஞ்சீவி பட இயக்குனருக்கு கால்ஷீட் இல்லையென கூறி கையை விரித்து அதிர்ச்சி அளித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்தை இயக்கி வருகிறார் பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா. இன்னொரு பக்கம் தயாரிப்பிலும் இறங்க தீர்மானித்த கொரட்டலா சிவா, இளம் இயக்குனரான வெங்கி குடுமுலா என்பவரை இயக்குனராக்கி படம் தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக விஜய் தேவரகொண்டாவிடம் கதை சொல்ல நேரம் கேட்டுள்ளனர்..
ஆனால், விஜய் தேவரகொண்டாவோ, தான் இன்னும் மூன்று வருடங்களுக்கு பிசி என்றும் தற்சமயம் கால்ஷீட் இல்லை என்றும் கூறி, கதை கேட்க கூட நேரம் ஒதுக்க மறுத்து விட்டாராம். சிரஞ்சீவி பட இயக்குனருக்கே இந்த நிலைமையா என விஜய் தேவரகொண்டாவின் அதிரடியை பார்த்து திகைத்து போயுள்ளது டோலிவுட்.