ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
கொரோனா பரவலின் அடுத்த அலை முன்பைக் காட்டிலும் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஒரு சில மாநிலங்களில் குறிப்பிட்ட லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. தியேட்டர்களில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் மக்களின் வருகை குறிப்பிட்ட அளவில் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தில் சில பிரபலங்கள் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்கள். அதன் காரணமாக சில சினிமா படங்களின் படப்பிடிப்புக்களை அக்குழுவினர் ரத்து செய்துள்ளார்கள்.
சில பெரிய படங்களின் படப்பிடிப்பு மட்டும் தற்போது நடந்து வருகிறதாம். அவையும் அடுத்த சில நாட்களில் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது. சினிமா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டால் சின்னத் திரைத் தொடர்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படலாம் என்கிறார்கள். அதன் காரணமாக டிவிக்களில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களுக்கும் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
கடந்த வருடம் கொரோனா தாக்கிய போதே எழுந்து கொள்ள முடியாத திரையுலகம் இந்த வருடத்தில் கொஞ்சம் மீள ஆரம்பித்தது. இப்போது மீண்டும் தாக்கம் என்பதால் அடுத்த மீள்வுக்கு இன்னும் பல மாத காலம் ஆகலாம் என வருத்தத்துடன் சொல்கிறார்கள்.