பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் | இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! |
கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகி இயக்கிய, லூசிபர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கு போவதாகவும் அந்தப்படத்திற்கு எம்புரான் என டைட்டில் வைத்திருப்பதாகவும் பிரித்விராஜும் மோகன்லாலும் இணைந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர். இதையடுத்து முதல் பாகத்திற்கு கதை எழுதிய, நடிகரும், கதாசிரியருமான முரளிகோபி இந்த இரண்டாம் பாகத்தின் முழு கதையையும் தற்போது பிரித்விராஜிடம் ஒப்படைத்து விட்டார்.
ஆனால் பிரித்விராஜ், மோகன்லால் இருவரும் மாறிமாறி தங்களது படங்களில் நடித்து வருவதால், எம்பிரான் படம் எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி வருகிறது.. இந்த வருடம் படப்பிடிப்பு துவங்கும் என, பிரித்விராஜ் ஏற்கனவே கூறிவந்த நிலையில், தற்போது மோகன்லாலை சந்தித்து இதுகுறித்து பேசி வந்துள்ளார் பிரித்விராஜ். விரைவில் அதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்பதற்கு அடையாளமாக தாங்கள் எடுத்துக்கொண்ட செல்பியை வெளியிட்டு, ரசிகர்களுக்கு சூசகமாக செய்தி சொல்லியிருக்கிறார் பிரித்விராஜ்.