கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகி இயக்கிய, லூசிபர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கு போவதாகவும் அந்தப்படத்திற்கு எம்புரான் என டைட்டில் வைத்திருப்பதாகவும் பிரித்விராஜும் மோகன்லாலும் இணைந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர். இதையடுத்து முதல் பாகத்திற்கு கதை எழுதிய, நடிகரும், கதாசிரியருமான முரளிகோபி இந்த இரண்டாம் பாகத்தின் முழு கதையையும் தற்போது பிரித்விராஜிடம் ஒப்படைத்து விட்டார்.
ஆனால் பிரித்விராஜ், மோகன்லால் இருவரும் மாறிமாறி தங்களது படங்களில் நடித்து வருவதால், எம்பிரான் படம் எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி வருகிறது.. இந்த வருடம் படப்பிடிப்பு துவங்கும் என, பிரித்விராஜ் ஏற்கனவே கூறிவந்த நிலையில், தற்போது மோகன்லாலை சந்தித்து இதுகுறித்து பேசி வந்துள்ளார் பிரித்விராஜ். விரைவில் அதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்பதற்கு அடையாளமாக தாங்கள் எடுத்துக்கொண்ட செல்பியை வெளியிட்டு, ரசிகர்களுக்கு சூசகமாக செய்தி சொல்லியிருக்கிறார் பிரித்விராஜ்.