Advertisement

சிறப்புச்செய்திகள்

தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம்

25 மே, 2025 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Pawan-Kalyan-slams-Telugu-film-industry-of-THIS-reason


தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆந்திர துணை முதல்வராகவும் இருக்கும் பவன் கல்யாண். அவர் நாயகனாக நடித்துள்ள 'ஹரிஹர வீர மல்லு' என்ற திரைப்படம் ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் அவரது அலுவலகம் சார்பில் பத்திரிகைக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் தெலுங்குத் திரையுலகத்தினர் மீதுள்ள அவருடைய கோபம் வெளிப்பட்டுள்ளது. முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் தெலுங்குத் திரையுலகினருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் பற்றியும், தற்போதைய சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் தெலுங்குத் திரையுலகத்திற்குக் கொடுக்கப்பட்டு வரும் முக்கியத்துவமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்திரபாபு தலைமையிலான அரசு ஆந்திராவில் பதவியேற்று ஒரு வருடம் ஆகியும், தெலுங்குத் திரையுலகத்தின் பிரநிதிகள் இன்னும் அவரை சந்திக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்கள். இனி, தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஆந்திர அரசாங்கத்தை தனித்தனியாக நேரடியாகத் தொடர்பு கொண்டு டிக்கெட் கட்டண உயர்வு உள்ளிட்ட விவரங்களைக் கேட்க அனுமதியில்லை என்றும் சம்பந்தப்பட்ட சங்கம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர் வருவாய், வரி செலுத்துதல், அடிப்படை வசதி இல்லாதது, மல்டிபிளக்ஸ தியேட்டர் செயல்பாடு, டிக்கெட் கட்டணம் உள்ளிட்டவை குறித்து தெலுங்கு திரையுலகத்தினர் அமைதியாக இருப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து விரைவில் அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜுன் 1ம் தேதி முதல் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தியேட்டர்களை மூடி ஸ்டிரைக் நடத்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதை உடனடியாக காலவரையின்றி ஒத்தி வைப்பதாக தெலுங்கு திரையுலகத்தினர் அறிவித்துள்ளனர்.

ஜுன் 12ம் தேதி தன்னுடைய 'ஹரிஹர வீர மல்லு' படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட சூழ்நிலையிலும் தெலுங்குத் திரையுலகத்தினர் ஸ்டிரைக் அறிவித்தது பவன் கல்யாணை கோபப்பட வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால்தான் உடனடியாக ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆந்திர அரசு திரையுலகினருக்கு ஆதரவாக உள்ள நிலையில் இப்படியான ஸ்டிரைக்கை அறிவித்ததும், அவர்கள் இதுவரை ஆந்திர முதல்வரை சந்திக்காததும்தான் பவன் கல்யாண் அலுவலகத்திலிருந்து கடுமையான பத்திரிகைக் குறிப்பு வரக் காரணமாக அமைந்துவிட்டது என்பது தெலுங்குத் திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பவன் கல்யாணின் படத்திற்கு தெலுங்கானா அரசு டிக்கெட் கட்டண உயர்வைத் தருமா என்ற கேள்வியையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள். தெலுங்கு திரையுலகை வைத்து ஆந்திர அரசியலிலும், தெலுங்கானா அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர்மலையாளத்தில் அடியெடுத்து வைத்த ... எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் எனக்குள் புதிய விடியலை திறந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

25 மே, 2025 - 01:05 Report Abuse
முருகன் அதிர்ஷ்டத்தில் பதவியை பெற்று விட்டு இவரின் ஆட்டம் அதிகமா உள்ளது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in