இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 45 வருடங்களாக 360 படங்களில் நடித்துள்ள மோகன்லால், தற்போது நம்பர் ஒன் இடத்தில் முன்னணி நடிகராகவே இருந்து வருகிறார். இருந்தாலும் தனக்குள் பல வருடங்களாகவே இருந்து வந்த டைரக்ஷன் ஆசைக்கு உயிர் கொடுக்கும் விதமாக தற்போது பரோஸ் என்கிற வரலாற்று பின்னணி கொண்ட திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியுள்ளார்.
வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்தபோது விட்டுச்சென்ற சொத்துக்களை பாதுகாக்கும் ஒரு பாதுகாவலர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி பேண்டஸி திரைப்படமாக 3டியில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் மோகன்லால். மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற வெற்றிகரமான படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ பொன்னூஸ் தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.
இதுபோன்ற பேண்டஸி படங்களுக்கு விஎப்எக்ஸ் எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒளிப்பதிவு என்பதும் ரொம்பவே முக்கியம். அந்த வகையில் இந்த படத்திற்கு தன்னுடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனை கூட்டணி சேர்த்துக்கொண்டார் மோகன்லால். படம் வரும் டிசம்பர் 25ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது படம் குறித்து புரமோட் பண்ணி வரும் மோகன்லால், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, “சந்தோஷ் சிவன் இந்த படத்தில் மிகச்சிறந்த பணியை கொடுத்துள்ளார். எப்போதெல்லாம் நானும் அவரும் இணைந்து ஒன்றாக பணியாற்றுகிறோமோ அப்போதெல்லாம் அவர் தேசிய விருது பெறுவதும் நடக்கிறது. காலாபாணி, இருவர், வானப்பிரஸ்தம் என உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம், அந்த வகையில் இந்த பரோஸ் படத்திற்கும் அவருக்கான தேசிய விருதை எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார் மோகன்லால்.