இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆடுஜீவிதம் மற்றும் குருவாயூர் அம்பலநடையில் என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில் ஆடுஜீவிதம் திரைப்படம் சீரியஸான கதை அம்சத்துடன் வெளியாகி இருந்தது. இதற்கு முற்றிலும் மாறாக குருவாயூர் அம்பலநடையில் படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார் பிரித்விராஜ். தற்போது மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தை இயக்கி வரும் பிரித்விராஜ் கிட்டத்தட்ட இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு நோபடி (Nobody) என்று டைட்டில் வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வித்தியாசமான ஹாரர் மிஸ்டரி திரில்லர் படமாக வெளியான ரோஷாக் படத்தை இயக்கிய இயக்குனர் நிசாம் பஷீர் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். இ4 என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் பிரித்விராஜும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.