10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

மலையாள திரையுலகில் நடிகர் சங்கம் அம்மா என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. பல வருடங்களாக இதன் தலைவராக இருந்த நகைச்சுவை நடிகர் இன்னசன்ட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமானதை தொடர்ந்து நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் பதவி வகித்து வருகிறார். நீண்ட நாட்களாக இந்த சங்கத்தில் துணைச் செயலாளர் பொறுப்பு வகித்து வந்த நடிகர் இடவேள பாபு சமீபத்தில் இந்த பொறுப்பில் இருந்து ஒதுங்கிக் கொண்டு தான் ஓய்வு பெறுவதாக கூறினார்.
இந்த நிலையில் அடுத்த தலைவராக சமீபத்தில் மீண்டும் நடிகர் மோகன்லாலும், பொருளாளராக முதன்முறையாக நடிகர் உன்னி முகுந்தனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது பொதுக்குழுவிற்கான 11 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே கமிட்டி உறுப்பினர்களாக இருந்த நடிகை அன்சிபா ஹாசன் மற்றும் நடிகை சரயு ஆகியோருக்கு ஓட்டுக்கள் குறைவாக விழுந்தன. அதே சமயம் 11 பேரில் 4 பேர் பெண்கள் இருக்க வேண்டும் என்கிற விதியும் இருக்கிறது.
வேறு பெண்கள் யாரும் இந்த கமிட்டி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடாததால் மீண்டும் அன்சிபா ஹாசன் மற்றும் நடிகை சரயு ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 11 பேரில் 10 பேர் மட்டுமே தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் 11வது நபரை தேர்வு செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை அன்சிபா ஹாசன், திரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




