தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா? | எந்த சத்தமும் இல்லாத 'ஜனநாயகன்' | பாலிவுட்டில் கால் பதிக்கும் அனுபமா | மித மிஞ்சிய உழைப்பில் உருவான படம் : விஜய் மில்டன் | 'சாரக்' படத்திற்கு தணிக்கை சான்று மறுப்பு | ஏ படத்திற்கு 45 இடத்தில் கட் | பிளாஷ்பேக் : கழுகு நடித்த படம் | பிளாஷ்பேக் : திருடனாக நடித்த ஜெமினி கணேசன் | உதய்ப்பூர் சென்றடைந்த திருமண ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | கணவன், மனைவி மோதிக் கொள்ளும் பிப்ரவரி 27 வெளியீடுகள் |

மலையாள திரை உலகில் மறைந்த நடிகர் சுகுமாரனின் மனைவியும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் தனது மகன்கள் பிரித்விராஜ் மற்றும் இந்திரஜித் இருவரும் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வருவதை சந்தோஷத்துடன் கவனித்து வருகிறார். இளைய மகன் பிரித்விராஜ் மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் நடிக்க துவங்கி டைரக்ஷன், நடிப்பு என பிசியாக இருக்கிறார். அதேசமயம் மூத்த மகன் இந்திரஜித் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் சர்வம், என் மன வானில் உள்ளிட்ட இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை மல்லிகா சுகுமாரன் அளித்த ஒரு பேட்டியில், “எனது மூத்த மகன் இந்திரஜித் விரைவில் டைரக்ஷனில் இறங்கப் போகிறார், அதற்கான கதையும் தயாராகி விட்டது. தற்போது ஹிந்தியில் அனுராக் காஷ்யப்புடன் ஒரு படம் மற்றும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி டைரக்ஷனில் ஹிந்தியில் இன்னொரு படம் மற்றும் மலையாளத்தில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இவற்றை முடித்துவிட்டு அடுத்ததாக டைரக்ஷனிலும் இறங்க இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
தம்பியை போல அண்ணனும் டைரக்ஷனில் சாதிப்பார் என எதிர்பார்க்கலாம்.