ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி, தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் குழிக்குள் தவறி விழும் இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இவர்தான். நடிப்பில் நல்ல திறமை கொண்ட இவர், அதிகம் சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீநாத் பாஷி விழா மேடையில் ஆவேசம் படத்தில் இடம் பெற்ற ஜடா என்கிற பாடலை பாடினார். அப்போது கீழ் இருந்த ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தவே, அவரும் உற்சாக மிகுதியால் சில மோசமான வார்த்தைகளையும் பிரயோகித்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவர் இப்படி பொதுவெளியில் மோசமாக வார்த்தைகளை பேசியதற்காக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் நடிகர் ஸ்ரீநாத் பாஷிக்கு இது போன்ற விஷயங்கள் புதிதல்ல.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பேட்டியில் போது அந்த நிகழ்ச்சியில் பெண் தொகுப்பாளரிடம் இதேபோன்று அநாகரிகமான வார்த்தைகளை ஸ்ரீநாத் பாஷி பேசியதால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார் என்பதும் அதனாலேயே அவருக்கு மலையாள திரையுலகில் ரெட் கார்டு போடப்படும் அளவிற்கு நிலைமை சீரியசாக சென்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.