அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
ஜூனியர் என்டிஆர் தற்போது தெலுங்கில் தேவரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். சிவா கொரட்டாலா இயக்கியுள்ள இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் ஹிந்தியில் உருவாகி வரும் வார் 2 என்ற படத்திலும் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர்.
இந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றத்தில் வந்த ஒரு நில சர்ச்சை வழக்கு தொடர்பாக ஜூனியர் என்டிஆரின் பெயரும் சோசியல் மீடியாவில் பரபரப்பாக அடிபட்டது. அதாவது கடந்த 2003ல் ஜூனியர் என்டிஆர் ஜூப்ளி கில்ஸ் பகுதியில் 36 லட்சம் மதிப்புள்ள ஒரு இடத்தை வாங்கி இருந்தார். அதன் பிறகு 2013ல் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.
தற்போது அந்த இடத்தை வைத்திருப்பவருக்கு கடன் மீட்பு தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதற்கான விசாரணை சமீபத்தில் நடைபெற்றபோது, இந்த இடம் ஜூனியர் என்டிஆருக்கு சொந்தமானது என்பது போன்று செய்தி வெளியானது. இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் இந்த இடத்தை பத்து வருடங்களுக்கு முன்பே விற்று விட்டதாகவும் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஜூனியர் என்டிஆர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.