ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
மலையாளத்தில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வெற்றிகளை பெற்று வருகின்றன. கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் கூட இந்த படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் குருவாயூர் அம்பல நடையில் திரைப்படம் வரும் மே 16ம் தேதி வெளியாக இருக்கிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் பிரித்விராஜ் வில்லத்தனம் கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் நடித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் விபின் தாஸ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நடித்ததன் மூலம் முதன்முறையாக மலையாளத் திரை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.