ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
மலையாள திரையுலகை பொறுத்தவரை ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு கூட மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அப்படி ஏதேனும் கட்டாய தேவை இருந்தால் மட்டுமே இரண்டாம் பாகம் பற்றி யோசிப்பார்கள் (சிபிஐ பாகங்கள் போல). அதனால் மலையாளத்தில் இரண்டாம் பாக படங்கள் வெளியாவது ரொம்பவே குறைவு. இந்த நிலையில் தான் 'ஆடு' என்கிற படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் கடந்த 2015ல் 'ஆடு' படத்தின் முதல் பாகம் வெளியானது. இந்த படத்தை மிதுன் மானுவேல் தாமஸ் என்பவர் இயக்கியிருந்தார். இவர் தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் சீரியல் கொலையை மையப்படுத்தி வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'அஞ்சாம் பாதிரா' என்கிற படத்தை இயக்கியவர். அதைத் தொடர்ந்து 2017ல் ஆடு படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ஹிட்டானது.
தற்போது ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதே கூட்டணியில் இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த மூன்று பாகங்களின் தயாரிப்பாளர், மலையாள நடிகர் விஜய் பாபு தான். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகை பலாத்கார வழக்கில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.