கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
மலையாளத்தில் சிறந்த பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் ஜாஸி கிப்ட். மலையாளத்தில் உருவாகி தமிழில் வெளியான '4 ஸ்டூடண்ட்ஸ்' என்கிற படத்தில் பரத், கோபிகா அதிரடியாக ஆடிப்பாடும் லஜ்ஜாவதியே மற்றும் அன்னக்கிளி நீ வாடி ஆகிய ஹிட் பாடல்களை இசையமைத்தது இவர்தான். இப்போதும் மலையாளத்தில் சீரான இடைவெளியில் படங்களுக்கு இசை அமைத்து வரும் இவர் வெளியிடங்களில் பல இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் கேரளாவில் உள்ள கொளஞ்சேரி என்கிற பகுதியில் உள்ள கல்லூரி விழா ஒன்றில் இவர் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக கலந்து கொண்டார்.
அப்படி அவர் நிகழ்ச்சி நடத்திய போது திடீரென கல்லூரி முதல்வர் மேடை ஏறி அவரிடம் இருந்து பாதியிலேயே மைக்கை பிடுங்கிக்கொண்டு அவரை இறங்கி போக சொல்லி இருக்கிறார். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஜாஸி கிப்ட் கூறும்போது, “நான் பெர்பார்மென்ஸ் பண்ணும்போது என்னுடன் என்னுடைய இசைக்குழுவும் மேடை ஏறி வந்தார்கள். அதை கல்லூரி முதல்வர் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி இசை நிகழ்ச்சி நடக்கும்போது இசையமைப்பாளருடன் அவரது குழுவும் மேடையில் பங்கு பெறுவார்கள் என்பதைக் கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது போன்ற சம்பவம் வேறு எந்த இசையமைப்பாளருக்கும் நடக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.