ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
மலையாளத்தில் சிறந்த பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் ஜாஸி கிப்ட். மலையாளத்தில் உருவாகி தமிழில் வெளியான '4 ஸ்டூடண்ட்ஸ்' என்கிற படத்தில் பரத், கோபிகா அதிரடியாக ஆடிப்பாடும் லஜ்ஜாவதியே மற்றும் அன்னக்கிளி நீ வாடி ஆகிய ஹிட் பாடல்களை இசையமைத்தது இவர்தான். இப்போதும் மலையாளத்தில் சீரான இடைவெளியில் படங்களுக்கு இசை அமைத்து வரும் இவர் வெளியிடங்களில் பல இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் கேரளாவில் உள்ள கொளஞ்சேரி என்கிற பகுதியில் உள்ள கல்லூரி விழா ஒன்றில் இவர் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக கலந்து கொண்டார்.
அப்படி அவர் நிகழ்ச்சி நடத்திய போது திடீரென கல்லூரி முதல்வர் மேடை ஏறி அவரிடம் இருந்து பாதியிலேயே மைக்கை பிடுங்கிக்கொண்டு அவரை இறங்கி போக சொல்லி இருக்கிறார். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஜாஸி கிப்ட் கூறும்போது, “நான் பெர்பார்மென்ஸ் பண்ணும்போது என்னுடன் என்னுடைய இசைக்குழுவும் மேடை ஏறி வந்தார்கள். அதை கல்லூரி முதல்வர் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி இசை நிகழ்ச்சி நடக்கும்போது இசையமைப்பாளருடன் அவரது குழுவும் மேடையில் பங்கு பெறுவார்கள் என்பதைக் கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது போன்ற சம்பவம் வேறு எந்த இசையமைப்பாளருக்கும் நடக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.