இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக குணச்சித்திர நடிகராக நடித்து வந்தவர் நடிகர் மாமுகோயா. யதார்த்தமான நடிப்பிற்கு பெயர் போன இவர் காமெடியிலும் தனது முத்திரையை பதித்தார். கோழிக்கோட்டை சேர்ந்த இவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். சமீபத்தில் கோழிக்கோட்டுக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற மோகன்லால் அங்கே இருக்கும் மாமுகோயாவின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். மோகன்லாலுடன் அவரது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான சத்யன் அந்திக்காடுவும் உடன் சென்றிருந்தார்.
மோகன்லாலும், மாமுகோயாவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரின் காமெடியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ஒன்று. மாமுகோயா இறந்த சமயத்தில் மோகன்லால் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்ததால் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வர முடியவில்லை. தற்போது கோழிக்கோடு நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தானாகவே மாமுகோயாவின் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்தினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார் மோகன்லால்.