துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழில் வெளியான 'வேதாளம்' படம், தெலுங்கில் 'போலோ சங்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதில் அஜித் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவி நடித்திருந்தார். இந்த படம் தோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்திருக்கும் நிலையிலும் சிரஞ்சீவி தனது சம்பளத்தை கண்டிப்புடன் கேட்டு வாங்கினார் என்றும், தயாரிப்பாளர் தனது வீட்டை விற்று சம்பளத்தை கொடுத்தார் என்றும் தகவல்கள் வெளியானது. இதனை தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் 10 கோடியை சிரஞ்சீவி திருப்பி கொடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கு சிரஞ்சீவிக்கு 60 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. முதல் கட்டமாக 50 கோடி வழங்கப்பட்டதாகவும், இரண்டாவது தவணையாக 10 கோடிக்கு காசோலை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் இரண்டாவது தவணையாக பெறப்பட்ட 10 கோடி ரூபாய்க்கான காசோலையை தயாரிப்பாளருக்கு சிரஞ்சீவி திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.