படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு இணையான நடிகராக வலம் வந்தவர் சுரேஷ் கோபி. ஆக்ஷன் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி தனக்கென தனி ரசிகர்களை பெற்ற இவர் ஒரு கட்டத்தில் அரசியலிலும் கால் வைத்தார். அதனால் சினிமாவில் ஒரு சிறிய இடைவெளி விழுந்தது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் படங்களை பிஸியாக நடித்து வருகிறார். இவரது வாரிசுகளை பொருத்தவரை இரண்டு மகன்களில் மூத்தவரான கோகுல் சுரேஷ் தற்போது மலையாளத்தில் கதாநாயகனாகவும் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இளைய மகன் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.
இரண்டு மகள்களில் மூத்தவரான பாக்யாவுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மாவேலிக்கரையை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரேயாஸ் மோகன் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் பாக்யா. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் திருவனந்தபுரத்தில் உள்ள சுரேஷ் கோபியின் இல்லத்தில் நடைபெற்றது. திருமணம் வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து ஜனவரி 20ல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்த இருக்கிறார் சுரேஷ் கோபி. பாக்யா சமீபத்தில் தான் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.