ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் கடந்த வெள்ளி அன்று ரங்கபாலி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக நாக சவுர்யா நடித்தார். இவர் தமிழில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியான தியா என்ற படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக நடித்தவர். கடந்த சில வருடங்களாகவே சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிப் படங்கள் எதுவும் இவருக்கு அமையாத நிலையில் இந்த ரங்கபாலி திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் ராசி இல்லாதவர்கள் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கும் என திடமாக நம்பினார். ரிலீசுக்கு முன்பு புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட உறுதியாக அதை கூறி வந்தார் நாக சவுர்யா..
இந்த நிலையில் படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியதுடன் எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றது. ஆனாலும் படக்குழுவினர் இந்த படம் வெற்றி என்று சக்சஸ் மீட்டை நடத்தினார்கள். அந்த நிகழ்வின்போது பத்திரிக்கையாளர் ஒருவர் நாக சவுர்யாவிடம், படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து ஒரு கேள்வியை கேட்டு விளக்கம் பெற முயற்சித்தார். அப்போது ஹீரோவுக்கு பதிலாக படத்தின் இயக்குனர் பவன் பசம் ஷெட்டி விளக்கம் கொடுக்க முயன்றார்.
ஆனாலும் திருப்தி அடையாத அந்த பத்திரிக்கையாளர் நாக சவுர்யாவிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்க, கோபத்தை அடக்கியபடி அதற்கு பதில் சொன்ன நாக சவுர்யா, அடுத்த கேள்வியை கேட்க ஆரம்பிப்பதற்கு உள்ளாகவே படக்கென கும்பிடு போட்டுவிட்டு எழுந்து வெளியேறினார். இவரது இந்த செயல் பத்திரிக்கையாளர்கள் மற்றும் படக்குழுவினரிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..