புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் பிரித்விராஜ். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனராகவும் மாறிய பிரித்விராஜ், இன்னொரு பக்கம் பிரித்விராஜ் புரொடக்சன் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருகிறார். அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, விஜய்யின் மாஸ்டர், கேஜிஎப் 2, காந்தாரா என மிகப் பெரிய படங்களை கேரளாவில் இவரது நிறுவனம் தான் வெளியிட்டது. மேலும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்தும் படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பிரித்விராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்திய மத்திய நிதி அமைச்சகம் பிரித்விராஜின் தயாரிப்பு நிறுவனம் கடந்த 2022-2023க்கான ஜிஎஸ்டி வருமான வரி கணக்குகளை எந்தவித குறைபாடும் இல்லாமல் தாக்கல் செய்துள்ளதாக தற்போது பாராட்டு சான்றிதழ் ஒன்றை வழங்கியுள்ளது.