கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் பிரித்விராஜ். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனராகவும் மாறிய பிரித்விராஜ், இன்னொரு பக்கம் பிரித்விராஜ் புரொடக்சன் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருகிறார். அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, விஜய்யின் மாஸ்டர், கேஜிஎப் 2, காந்தாரா என மிகப் பெரிய படங்களை கேரளாவில் இவரது நிறுவனம் தான் வெளியிட்டது. மேலும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்தும் படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பிரித்விராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்திய மத்திய நிதி அமைச்சகம் பிரித்விராஜின் தயாரிப்பு நிறுவனம் கடந்த 2022-2023க்கான ஜிஎஸ்டி வருமான வரி கணக்குகளை எந்தவித குறைபாடும் இல்லாமல் தாக்கல் செய்துள்ளதாக தற்போது பாராட்டு சான்றிதழ் ஒன்றை வழங்கியுள்ளது.