லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகர் சிரஞ்சீவி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்தாண்டு ஆச்சார்யா, காட்பாதர் என இரண்டு படங்களில் நடித்தார் சிரஞ்சீவி. இதில் ஆச்சார்யா படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. காட்பாதர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. அதேசமயம் இந்தாண்டு துவக்கத்தில் அவர் நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாக்கி வரும் போலோ சங்கர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி.
வால்டர் வீரய்யா படத்தின் வெற்றிக்கு அந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ரவிதேஜாவும் இணைந்து நடித்திருந்தது முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இதை கவனத்தில் கொண்ட சிரஞ்சீவி அடுத்ததாக தன்னை தேடி வந்து சோக்காடே சின்னி நாயனா இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா குரசாலா சொன்ன கதையில் இன்னொரு இளம் நடிகருக்கான கதாபாத்திரமும் இருந்ததால் ரொம்பவே உற்சாகமாகி விட்டாராம். அந்த கதாபாத்திரத்தில் இளம் நடிகர் சித்து ஜொன்னலகடா நடிக்க உள்ளாராம். தனது அடுத்தடுத்த படங்களில் இப்படி இன்னொரு இளம் நடிகரும் நடிக்கும் வகையில் பார்த்துக் கொள்ள முடிவு செய்து விட்டாராம் சிரஞ்சீவி.