புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கேஜிஎப் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து கன்னடத்திலிருந்து இன்னும் ஒரு வெற்றிப்படமாக வெளியாகி கவனத்தை ஈர்த்த படம் காந்தாரா. தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட் என நான்கு மொழிகளிலும் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. ஆனால் படம் வெளியான சில வாரங்களிலேயே இந்த படத்தில் இடம்பெற்ற வராஹ ரூபம் என்கிற பாடல் மலையாள திரையுலகில் தனி இசைக்குழுவாக இயங்கி வரும் தாய்க்குடம் பிரிட்ஜ் என்பவர்கள் ஏற்கனவே உருவாக்கிய நவரசம் என்கிற பாடலின் காப்பி என்கிற சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு, கேரளாவில் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் இதுகுறித்து காந்தாரா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ரிஷப் ஷெட்டி மீது வழக்கு தொடர்ந்தது. அதனையடுத்து காந்தாரா படத்தில் வராஹ ரூபம் பாடலை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் இரு தரப்பிலும் மாறிமாறி இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்றது.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதிக்குள் கோழிக்கோடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனை உறுதி செய்த உச்சநீதிமன்றமும் இவர்கள் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டதுடன், ஒருவேளை இந்த வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்கிற ஒரு சலுகையையும் வழங்கியது.
இந்த நிலையில் கோழிக்கோடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இருவரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி தங்களது விளக்கங்களை அளித்தனர். இதுகுறித்து கேரள போலீசார் தரப்பில் கூறும்போது மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்கள் மறுபடியும் ஆஜராக வேண்டும் என்றும் போலீஸாரால் கூறப்பட்டுள்ளது. செக்சன் 63 காப்பிரைட் சட்ட விதியின்படி இது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருந்தது. அதேசமயம் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இவர்கள் இருவருக்குமே கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.