அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. |
தமிழ் திரையுலகில் அரவிந்த்சாமி, மலையாள திரையுலகில் குஞ்சாக்கோ போபன் இருவருமே அவர்கள் அறிமுகமான காலகட்டத்தில் ஏராளமான இளம் ரசிகைகளின் கனவு நாயகர்களாகவே வலம் வந்தனர். இந்தநிலையில் பல வருடங்கள் கழித்து இந்த இருவரும் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஓட்டு என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் தமிழில் ரெண்டகம் என்கிற பெயரில் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமியுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து குஞ்சாக்கோ போபன் கூறும்போது, அரவிந்த்சாமி ஒரு மிகச்சிறந்த குக் என்பதை மும்பையில் தான் தெரிந்து கொண்டேன் என்று ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.
இது குறித்து குஞ்சாக்கோ கூறும்போது, “மும்பையில் நானும் அரவிந்த்சாமியும் ஒரு ரெஸ்டாரண்டில் உணவருந்த சென்றபோது அங்கிருந்த செப்கள் இரண்டு பேர் அரவிந்த்சாமி மிகச்சிறந்த குக் என்றும் அவர் சமைக்கும் உணவுகளின் சிறப்பு பற்றியும் பாராட்டி பேசினார்கள். அதற்கு முன்னதாக அவர்கள் சென்னைக்கு வந்திருந்தபோது அரவிந்த்சாமி சமைத்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு ஆச்சரியப்பட்டுப் போனார்களாம். அதுமட்டுமல்ல, அரவிந்த்சாமியின் மகள் சென்னையில் நான்கு நாட்கள் உணவு திருவிழா ஒன்றையும் நடத்தி உள்ளாராம். இந்த தகவல்களை எல்லாம் அப்போது கேட்டு ஆச்சரியமடைந்தேன்.
அந்த சமயத்தில் அரவிந்த்சாமி எனக்கு ஒரு ஆபர் கொடுத்தார்.. அதாவது அவர் அடுத்த முறை அவர் கேரளா வரும்போது என்னுடைய வீட்டிற்கு வருவதாகவும் எனக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து தருவதாகவும் கூறினார். எனது வீடு அந்த அளவுக்கு பெரிதாக இல்லையே என்று தயங்கினேன்.. எனக்கு சமைப்பதற்கு ஒரு கிச்சன் மட்டும் கொடுங்கள்.. அது போதும் என்று கூறினார் அரவிந்த்சாமி. அவர் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார் குஞ்சாக்கோ போபன்.