'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாளத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் த்ரிஷ்யம். இந்த படத்தில் ஐஜி கீதா பிரபாகர் என்கிற கண்டிப்பான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஆஷா சரத். அதைத்தொடர்ந்து தமிழில் பாபநாசம், தூங்காவனம் மற்றும் மலையாளத்தில் திரிஷ்யம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்தே நடிப்பின் மீதான ஆர்வத்தால் திரையுலகில் நுழைந்தவர். அதேசமயம் குடும்பம், நடிப்பு என சரிசமமாக முக்கியத்துவம் கொடுத்து பயணித்து வருகிறார் ஆஷா சரத்.
இந்தநிலையில் தற்போது தனது குடும்பத்துடன் ஸ்வீடன் நாட்டில் விடுமுறையை கழித்து வரும் ஆஷா சரத் தனது 29 ஆவது திருமண நாளை தனது கணவர் சரத் வாரியருடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்க்கை என்பதே ஒரு கொண்டாட்டம். என் கணவருடன் 29வது திருமண நாளை சுவீடனில் கொண்டாடி வருகிறேன். இந்த வாழ்க்கை பயணத்தில் சந்தோசம், மகிழ்ச்சி, வருத்தம், வலி என கடினமான மற்றும் மென்மையான பாதையில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பயணித்து இருக்கிறோம். எங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும் எங்களை வாழ்த்தியவர்களுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.