‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

கடந்த இரண்டு வருடங்களாக மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த படங்கள் வரிசையாக ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியாகி வந்தன. அதில் சில படங்கள் வெற்றி, சில படங்கள் ஆவரேஜ் என்கிற வரவேற்பை பெற்றன. இந்தநிலையில் கடந்த மாதம் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்த கடுவா திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. பக்கா ஆக்சன் படமாக உருவாகியிருந்த இந்த படத்திற்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததுடன் ரூ.50 கோடி வசூல் கிளப்பிலும் இந்த படம் இணைந்தது.
அதனால் நேற்று பிரித்விராஜ் நடிப்பில் வெளியான தீர்ப்பு படத்திற்கும் அதே அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இதுவரை பிரித்விராஜின் படங்கள் முதல் நாள் வசூலாக குறைந்தபட்சம் ஒரு கோடிக்கு மேலும் அதிகபட்சமாக 2 கோடி வரையிலும் வசூலித்து வந்த நிலையில் தீர்ப்பு திரைப்படம் வெறும் 40 லட்சம் மட்டுமே வசூல் செய்திருப்பது திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தனைக்கும் பிரித்விராஜின் கடுவா பட வெற்றி கொடுத்த எதிர்பார்ப்பில் எப்படியும் முதல் நாள் வசூல் ஒரு கோடியை தாண்டும் என கணக்கிடப்பட்ட நிலையில் படம் திருப்திகரமாக இல்லை என வெளியான விமர்சனங்களால் அடுத்தடுத்த காட்சிகளுக்கு வரவேற்பு குறைந்து வசூல் பாதிக்கப்பட்டதாக தியேட்டர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
இத்தனைக்கும் மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்கிய லூசிபர் என்கிற ஹிட் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியரும், நடிகருமான முரளிகோபி தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். நடிகர் சித்தார்த் மலையாளத்தில் முதன்முதலாக நுழைந்து திலீப்புடன் இணைந்து நடித்த கம்மர சம்பவம் என்கிற படத்தை இயக்கிய ரதீஷ் அம்பாட் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். லூசிபர் படத்தில் வொர்க் அவுட் ஆன முரளி கோபியின் கதை, தீர்ப்பு படத்திற்கு சரியான தீர்ப்பை வழங்கவில்லை என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.




