சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தமிழ் சினிமாவில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை என தமிழ்நாட்டில் நம்ம ஊர் ஹீரோக்கள் பல பாஷைகளில் பேசுவதைப்போல மலையாள சினிமாவிலும் கோழிக்கோடு, திருவனந்தபுரம், காஞ்சிரப்பள்ளி, பாலக்காடு, திருச்சூர், கண்ணூர் ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் பாஷைகள் பிரபலமானவை தான். கேட்பதற்கும் கூட அவை வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் நடிகர் பிரித்திவிராஜ் தற்போது ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் தான் நடித்துள்ள காப்பா என்கிற படத்தில் முதன்முறையாக திருவனந்தபுரம் பாஷை பேசி நடித்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிரித்விராஜ் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவனந்தபுரத்தில் தான் என்றாலும் சினிமாவுக்காக கொச்சியில் செட்டில் ஆகிவிட்டார்.
சமீபத்தில் திருவனந்தபுரம் மார்க்கெட் பகுதியில் கட்டப்பட்ட மிக நீண்ட நடை மேம்பாலம் ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நடிகர் பிரித்விராஜூக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது இந்த நிகழ்வில் பேசிய பிரித்விராஜ், கல்லூரியில் தான் படித்தபோது, இதே மார்க்கெட் வீதிகளில், பலமுறை பைக்கில் ஓவர் ஸ்பீடாக சென்றதாகவும் அப்போது போலீசாரிடம் சிக்கி அவர்களின் கண்டிப்புக்கு ஆளானதாகவும் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் திருவனந்தபுரம் தனது சொந்த ஊர் என்றாலும் இதுவரை எந்த ஒரு படத்திலும் திருவனந்தபுரம் பாஷை பேசி நடித்ததில்லை என்றும் தற்போது தான் நடித்து வரும் காப்பா என்கிற படத்தில் தனது சொந்த ஊர் பாஷையை பேசி நடித்து இருப்பதாகவும் கூறியுள்ளார் பிரித்விராஜ்.