பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் |
துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான சீதாராமம் படம் மிகப்பெரிய வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பிரபல இயக்குனர் ஜோஷீயின் மகன் அபிலாஷ் ஜோஷி இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான். இதுதவிர இன்னும் அறிவிக்கப்படாத ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.
பிரபல மலையாள காமெடி நடிகரும், துல்கர் சல்மானுடன் பல படங்களில் நண்பராக நடித்தவருமான சௌபின் சாஹிர் டைரக்சனில் ஒதிரம் கடகம் என்கிற படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த வருடம் துல்கர் சல்மானே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஒதிரம் கடகம் படத்தை தற்சமயம் நிறுத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளார் துல்கர் சல்மான். தான் சமீபத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சில படங்களின் கதையும் இந்த படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே சாயலில் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சிறிது காலம் கழித்து இந்த படத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.
நடிகர் சௌபின் சாஹிர் சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மானை வைத்து 'பறவ' என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.