வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான சீதாராமம் படம் மிகப்பெரிய வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பிரபல இயக்குனர் ஜோஷீயின் மகன் அபிலாஷ் ஜோஷி இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான். இதுதவிர இன்னும் அறிவிக்கப்படாத ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.
பிரபல மலையாள காமெடி நடிகரும், துல்கர் சல்மானுடன் பல படங்களில் நண்பராக நடித்தவருமான சௌபின் சாஹிர் டைரக்சனில் ஒதிரம் கடகம் என்கிற படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த வருடம் துல்கர் சல்மானே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஒதிரம் கடகம் படத்தை தற்சமயம் நிறுத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளார் துல்கர் சல்மான். தான் சமீபத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சில படங்களின் கதையும் இந்த படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே சாயலில் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சிறிது காலம் கழித்து இந்த படத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.
நடிகர் சௌபின் சாஹிர் சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மானை வைத்து 'பறவ' என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.