'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி ஹீரோவாக வலம்வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் படம் லைகர். பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த படம் குத்துசசண்டையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தியில் உருவாகியுள்ள இந்த படம் தென்னிந்திய மொழிகளிலும் சேர்த்து வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. பான் இந்தியா படமாக இது வெளியாக இருப்பதால் கடந்த இரண்டு வாரங்களாக மும்பை, சென்னை, சண்டிகர், ஐதராபாத், கேரளா என இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் மாறிமாறி கலந்து கொண்டு வருகிறார் விஜய் தேவரகொண்டா.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்தேவரகொண்டா பத்திரிக்கையாளர்கள் முன்பாக டேபிளில் கால்களை தூக்கி வைத்து நாற்காலியில் குத்தவைத்து அமர்ந்தபடி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நிருபர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவிடம் பேசும்போது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த டாக்ஸிவாலா படம் ரிலீஸ் ஆன சமயத்தில் விஜய் தேவரகொண்டாவிடம் தன்னால் எப்படி சவுகரியமாக பேச முடியவில்லை என்பது பற்றி கூறினார். அதற்கு நகைச்சுவையாக பதில் அளிப்பதாக நினைத்துக்கொண்ட விஜய் தேவரகொண்டா, “ஏன் இப்படி சவுகரியமாக உட்கார்ந்து கொண்டு இப்போது பேசலாமே” என்று கூறியபடி தனது கால்களை அங்கிருந்த டீப்பாய் மீது தூக்கி வைத்துக்கொண்டு பதில் அளித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவின் இந்த செயல் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும் நெட்டிசன்களிடம் மிகப்பெரிய விமர்சனங்களையும் பெற்று வருகிறது.