ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி ஹீரோவாக வலம்வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் படம் லைகர். பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த படம் குத்துசசண்டையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தியில் உருவாகியுள்ள இந்த படம் தென்னிந்திய மொழிகளிலும் சேர்த்து வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. பான் இந்தியா படமாக இது வெளியாக இருப்பதால் கடந்த இரண்டு வாரங்களாக மும்பை, சென்னை, சண்டிகர், ஐதராபாத், கேரளா என இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் மாறிமாறி கலந்து கொண்டு வருகிறார் விஜய் தேவரகொண்டா.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்தேவரகொண்டா பத்திரிக்கையாளர்கள் முன்பாக டேபிளில் கால்களை தூக்கி வைத்து நாற்காலியில் குத்தவைத்து அமர்ந்தபடி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நிருபர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவிடம் பேசும்போது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த டாக்ஸிவாலா படம் ரிலீஸ் ஆன சமயத்தில் விஜய் தேவரகொண்டாவிடம் தன்னால் எப்படி சவுகரியமாக பேச முடியவில்லை என்பது பற்றி கூறினார். அதற்கு நகைச்சுவையாக பதில் அளிப்பதாக நினைத்துக்கொண்ட விஜய் தேவரகொண்டா, “ஏன் இப்படி சவுகரியமாக உட்கார்ந்து கொண்டு இப்போது பேசலாமே” என்று கூறியபடி தனது கால்களை அங்கிருந்த டீப்பாய் மீது தூக்கி வைத்துக்கொண்டு பதில் அளித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவின் இந்த செயல் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும் நெட்டிசன்களிடம் மிகப்பெரிய விமர்சனங்களையும் பெற்று வருகிறது.