‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் | டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? | ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் |
கொரோனா தாக்கம் துவங்கிய கடந்த இரண்டு ஆண்டுகளின்போது தமிழகத்தில் கூட ஓரளவு படப்படிப்புகள், தியேட்டர் வெளியீடுகள் என நிலைமை சமாளிக்கத்தக்கதாக இருந்தது. ஆனால் கேரளாவில் லாக்டவுன் நிபந்தனைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டதால் தமிழகம், ஆந்திராவில் பட வெளியீடுகள் துவங்கிய பின்னரும் கூட அதற்கடுத்த சில மாதங்கள் வரை கேரளாவில் தியேட்டர்கள் இயங்கத் துவங்கவில்லை. அதன் பின்னர் கடந்த சில மாதங்களாகத்தான் நிலைமை சீராகி உள்ளது..
அந்த வகையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளியான கடுவா திரைப்படம் வெற்றிகரமான படமாக அமைந்து விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட படம் வெளியாகி 25 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த படம் 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.
இன்னும் பல தியேட்டர்களில் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல சமீபத்தில் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான பாப்பன் திரைப்படமும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் கூட்டத்தை வரவழைத்துள்ளது. அந்தவகையில் மலையாள திரை உலகம் தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பி உள்ளது என்று சொல்லலாம்.