‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மலையாள திரையுலகில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி மூவரும். இதில் சுரேஷ்கோபி இடையில் அரசியலில் நுழைந்து, நடிப்பை விட்டு ஒதுங்கினாலும் தற்போது மீண்டும் பழையபடி சுறுசுறுப்பாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக பல நிகழ்வுகளில் இவர்கள் மூவரும் ஒன்றாக கலந்து கொண்டாலும் கொரோனா தாக்கத்திற்கு பிறகான இந்த இரண்டு வருடங்களில் தற்போது தான் மீண்டும் முதன்முறையாக ஒன்று கூடியுள்ளனர்.
நேற்று முன்தினம் சுரேஷ்கோபியின் பிறந்தநாள் என்பதுடன் மலையாள நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாலும் இந்த அதிசய சந்திப்பு நிகழ்ந்துள்ளது.. பொதுக்குழு கூட்டத்திலேயே சுரேஷ்கோபியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மோகன்லாலும் மம்முட்டியும் இதுகுறித்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் சுரேஷ்கோபி. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.




