ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
மலையாள சினிமாவின் சாக்லேட் ஹீரோவாக இப்போதும் ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் குஞ்சாக்கோ போபன் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படங்களில் ஒன்று தான் ''நின்ன தான் கேஸ் கொடு''. இந்தப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் விஜய்சேதுபதியின் ஆஸ்தான நாயகியான காயத்ரி. மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற ஹிட் படத்தை இயக்கிய ரதீஷ் பாலகிருஷ்ணன் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்காக தனது தோற்றத்திலும் பேசும் வித்தியாசமான மலையாள பாஷையிலும் என புதிய ஒரு ஆளாகவே மாறிவிட்டார் குஞ்சாக்கோ போபன். இந்த படப்பிடிப்பின்போது வீடியோ காலில் தனது மகனுடன் பேசியபோது தன்னை அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்று பெருமையுடன் இந்த கதாபாத்திரம் பற்றி சமீபத்தில் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல இந்த படத்தின் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் தான் இயக்கிய ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் கதையை முதலில் தன்னிடம் தான் வந்து கூறினார் என்றும் ஆனால் அந்த கதையை தன்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என்பதால் அந்த படத்தை நடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டு விட்டதாகவும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் குஞ்சாக்கோ போபன்.
அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணனை அழைத்த குஞ்சாக்கோ போபன், “ஏண்டா துஷ்டா.. என்னிடம் கதையை ஒழுங்காக கூறாமல் இப்படி ஒரு நல்ல படத்தை என்னிடமிருந்து பறித்து விட்டாயே” என்று செல்லமாக அவரை கடிந்து கொண்டதுடன் அடுத்த படத்தின் கதையை தயார் செய்து வா நான் தான் நடிப்பேன் என்று செல்லமாக கண்டிஷனும் போட்டு அதன்படி தற்போது நடித்து வரும் படம் தான் இந்த படம்” என்றும் கூறி உள்ளார் குஞ்சாக்கோ போபன்.