ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
தமிழில் ராஜாராணி, நையாண்டி, என வெகு சில படங்களில் மட்டுமே நடித்த நஸ்ரியா, நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகினார்.. தற்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் நஸ்ரியா, மலையாளத்தில் தனது கணவர் பஹத் பாசிலுடன் இணைந்து 'ட்ரான்ஸ்' என்கிற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து 'அண்டே சுந்தரனிகி' என்கிற படம் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
நானி கதாநயகனாக நடிக்கும் இந்தப்படத்தை 'மெண்டல் மதிலோ' புகழ் விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கியுள்ளார். வரும் ஜூன்-10ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ளது.. இந்தநிலையில் இந்தப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ள நஸ்ரியா, இயக்குனர் பற்றியும் அவருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி நஸ்ரியா கூறும்போது, “இன்று என்னுடைய டப்பிங் பணிகளை முடித்துவிட்டேன்.. இயக்குனர் விவேக் ஆத்ரேயாவை போல இந்த பயணம் முழுவதும் ஒரு சிறந்த வழிகாட்டியை நான் பெற்றிருக்க முடியாது. ஒரு அற்புதமான மனிதராக இருந்து, சிறந்த நண்பராக மாறிய உங்களுடன் ஒவ்வொரு நாளும் வேலை செய்வதை நான் விரும்பினேன். கடந்த ஒரு வருடமாக நீண்ட இந்த பயணத்தில். நாம் வெகுதூரம் வந்துவிட்டோம்.. இனி அடுத்த முறை பார்க்கும் வரை உங்கள் அனைவரையும் மிஸ் பண்ணுவேன் " என்று கூறியுள்ளார் நஸ்ரியா.