ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழில் ராஜாராணி, நையாண்டி, என வெகு சில படங்களில் மட்டுமே நடித்த நஸ்ரியா, நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகினார்.. தற்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் நஸ்ரியா, மலையாளத்தில் தனது கணவர் பஹத் பாசிலுடன் இணைந்து 'ட்ரான்ஸ்' என்கிற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து 'அண்டே சுந்தரனிகி' என்கிற படம் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
நானி கதாநயகனாக நடிக்கும் இந்தப்படத்தை 'மெண்டல் மதிலோ' புகழ் விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கியுள்ளார். வரும் ஜூன்-10ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ளது.. இந்தநிலையில் இந்தப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ள நஸ்ரியா, இயக்குனர் பற்றியும் அவருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி நஸ்ரியா கூறும்போது, “இன்று என்னுடைய டப்பிங் பணிகளை முடித்துவிட்டேன்.. இயக்குனர் விவேக் ஆத்ரேயாவை போல இந்த பயணம் முழுவதும் ஒரு சிறந்த வழிகாட்டியை நான் பெற்றிருக்க முடியாது. ஒரு அற்புதமான மனிதராக இருந்து, சிறந்த நண்பராக மாறிய உங்களுடன் ஒவ்வொரு நாளும் வேலை செய்வதை நான் விரும்பினேன். கடந்த ஒரு வருடமாக நீண்ட இந்த பயணத்தில். நாம் வெகுதூரம் வந்துவிட்டோம்.. இனி அடுத்த முறை பார்க்கும் வரை உங்கள் அனைவரையும் மிஸ் பண்ணுவேன் " என்று கூறியுள்ளார் நஸ்ரியா.




