தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
தமிழில் ஜூலை காற்றில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை சம்யுக்தா மேனன். தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். குறிப்பாக சமீபத்தில் தெலுங்கில் வெளியான பீம்லா நாயக் படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சம்யுக்தா மேனன். அதுமட்டுமல்ல தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் நடிக்கும் வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து கிடைத்த இடைவெளியில் ஓய்வுக்காக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா பறந்துவிட்டார் சம்யுக்தா மேனன். பள்ளியில் படிக்கும் நாட்களிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு செல்வது, கங்கை நதியில் நீராடுவது என்பது இவரது கனவாகவே இருந்து உள்ளது. தற்போது உத்தரகாண்ட் பகுதியில் விடுமுறையை கொண்டாடிவரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள சம்யுக்தா மேனன் கூடவே தனது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஓடும் கங்கை நதியின் சலசலப்பை கேட்க முடிகிறது. இமயமலையில் இருந்து வீசும் தென்றல் என்னை வருடுகிறது. இதற்கு முன் நான் இங்கே இருந்து இருக்கிறேன்.. இங்கேயே வாழ்ந்து இருக்கிறேன் என்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. என் சிறுவயது கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி' என்று கூறியுள்ளார் சம்யுக்தா மேனன்.