இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மலையாள சினிமாவின் மிக முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் தான் கணேஷ்குமார். மலையாள நடிகர் சங்கத்தில் துணை தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அதுமட்டுமல்ல இவர் ஒரு எம்.எல்.ஏவும் கூட. நான்கு முறை தொடர்ந்து எம்.எல்.ஏவாக தேர்வான கணேஷ்குமார், தற்போது கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனாபுரம் தொகுதி எம்.எல்ஏவாக இருக்கிறார். படப்பிடிப்பு நேரம் போக மீதி நேரத்தில் தொகுதியை பார்வையிட கிளம்பிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் கணேஷ்குமார்.
அந்தவகையில் தனது தொகுதியில் உள்ள தளவூர் என்கிற பகுதியில் தனது எம்எல்ஏ நிதியில் இருந்து சுமார் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கி அரசு மருத்துவமனை ஒன்றை புதுப்பித்து கொடுத்தார் கணேஷ்குமார். அந்த மருத்துவமனையின் சுகாதாரம் குறித்து அதிக அளவில் புகார்கள் வந்ததை தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக சமீபத்தில் அந்த மருத்துவமனைக்கு அதிரடி விசிட் அடித்தார் கணேஷ்குமார்.
புகார்களில் சொல்லப்பட்டது போலவே மருத்துவமனை சுத்தமாக பராமரிக்க படாமலும் குப்பைகள் நிறைந்தும் காணப்பட்டதை கண்கூடாகவே கண்ட கணேஷ்குமார். அங்கிருந்த ஒரு துடைப்பத்தை எடுத்து மருத்துவமனையை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார். அவரது இந்த செயலால் அங்கிருந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்..
அதன்பின் அங்கிருந்த பணியாளர்களிடம் பேசிய கணேஷ்குமார் மக்கள் தங்கள் நோய் தீர்ப்பதற்காக வந்துபோகும் இடத்தை கொஞ்சம் மனிதாபிமானத்தோடும் வாங்குகின்ற சம்பளத்துக்கு கொஞ்சம் நன்றியுணர்வோடும் கவனித்து சுத்தப்படுத்த வேண்டும் என்றும் மீண்டும் இதுபோல தொடர்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்டிப்புடன் அறிவுறுத்தி சென்றார்.