சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகமாக உள்ளது. மலையாள நடிகர் நடிகைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். நடிகர்கள் சுரேஷ்கோபி, மம்முட்டி, துல்கர் சல்மானை தொடர்ந்து டிகை அன்னா பென்னுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹெலன் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் அன்னா பென். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான மாநில விருது பெற்றார். கும்பளாங்கி நைட்ஸ், கப்பெல்லா படங்கள் மூலம் நடிப்பு திறனை நிரூபித்தவர். தற்போது நாரதன், என்னிட்டு அவசானம், காபா, நைட் டிரைவிங் படங்களில் நடித்து வருகிறார். அன்னா பென்னும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. வாசனை இழப்பு தவிர அத்தனை அறிகுறியும் இருந்தது. பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். மிகவும் கவனத்துடன் இரண்டு வருடங்களாக கொரோனாவிடமிருந்து தப்பி வந்தேன். இப்போது மாட்டிக் கொண்டேன். அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள். என்று கூறியிருக்கிறார்.