துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகமாக உள்ளது. மலையாள நடிகர் நடிகைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். நடிகர்கள் சுரேஷ்கோபி, மம்முட்டி, துல்கர் சல்மானை தொடர்ந்து டிகை அன்னா பென்னுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹெலன் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் அன்னா பென். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான மாநில விருது பெற்றார். கும்பளாங்கி நைட்ஸ், கப்பெல்லா படங்கள் மூலம் நடிப்பு திறனை நிரூபித்தவர். தற்போது நாரதன், என்னிட்டு அவசானம், காபா, நைட் டிரைவிங் படங்களில் நடித்து வருகிறார். அன்னா பென்னும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. வாசனை இழப்பு தவிர அத்தனை அறிகுறியும் இருந்தது. பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். மிகவும் கவனத்துடன் இரண்டு வருடங்களாக கொரோனாவிடமிருந்து தப்பி வந்தேன். இப்போது மாட்டிக் கொண்டேன். அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள். என்று கூறியிருக்கிறார்.