ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தொண்ணூறுகளில் மலையாள சினிமாவின் ஆக்சன் கிங்காக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களுக்கு முன் அரசியலில் இறங்கியதால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இந்தநிலையில் மீண்டும் நடிப்புக்கு திரும்பி படங்களில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. அந்தவகையில் கடந்த வருடம் கொரோனா முதல் அலை துவங்குவதற்கு சற்று முன்னதாக வெளியான 'வரனே ஆவிஷ்யமுண்டு' படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது தமிழில் தயாராகி வரும் தமிழரசன் உள்பட நான்கு படங்களில் நடித்துள்ளார் சுரேஷ்கோபி..
கொரோனா இரண்டாவது அலை முடிந்து கேரளாவிலும் இயல்புநிலை துவங்கிய நிலையில் அவர் நடித்துள்ள காவல் என்கிற படம் வரும் நவ-25ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. ஆக்சன் படங்கள் மூலம் சுரேஷ் கோபியின் இமேஜை தூக்கி நிறுத்திய கதாசிரியரும், நடிகருமான ரெஞ்சி பணிக்கரின் மகன் நிதின் ரெஞ்சி பணிக்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய மம்முட்டி நடித்த கசபா என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.