புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
படம் : திருப்பாச்சி
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : விஜய், த்ரிஷா, மல்லிகா, கோட்டா சீனிவாச ராவ், பசுபதி
இயக்கம் : பேரரசு
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்
ஊர் பெயர்களில் படத்தின் தலைப்பு வைத்து, நம் கவனத்தை ஈர்த்தவர், இயக்குனர் பேரரசு. அவரின் முதல் படம், திருப்பாச்சி. 2005ம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியான இப்படம், 200 நாட்கள் ஓடி, பெரும் வெற்றியை பெற்றது. அண்ணன் - தங்கை சென்டிமென்டுடன், ஆக் ஷன் விருந்து படைத்தார், பேரரசு. இக்கதை, அஜித்தை மனதில் வைத்தே அவர் உருவாக்கியிருந்தாராம்.
திருப்பாச்சி அருகில் இருக்கும் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்; அரிவாள் தயாரிக்கும் தொழிலாளி. இவரின் தங்கை மல்லிகாவை, சென்னையில் வசிக்கும் நபருக்கு திருமணம் செய்து கொடுப்பார். ஆனால், சென்னையில் நடக்கும் ரவுடிசத்தால், தன் தங்கை பாதிக்கப்பட, வாயில் அரிவாளை கவ்வி, அனைத்து ரவுடிகளையும் தனி ஒருவனாக போட்டுத் தள்ளுகிறார். கதையில் ஒன்றும் இல்லை; திரைக்கதையில் தான் அசத்தியிருந்தார், பேரரசு.
கிராமத்து இளைஞர் கதாபாத்திரம், விஜய்க்கு பொருந்தி இருந்தது. அவரின் ஆக் ஷன் காட்சிகள், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. ஆட்டோகிராப் படத்தில் நடித்த மல்லிகாவிற்கு, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம்; சிறப்பாக செய்திருந்தார். கில்லி படத்தின் வெற்றியால், இப்படத்திலும் விஜய் - த்ரிஷா ஜோடி சேர்ந்தது. விஜயின் தங்கை மல்லிகா தான், படத்தின் நாயகி. த்ரிஷா, நான்கு பாடல்களுக்கு நடனம் மட்டும் ஆடி செல்வார்.
படத்தின் ஏழு பாடல்களையும், இயக்குனர் பேரரசு எழுத, கட்டுக் கட்டு... பாடலை தேவிஸ்ரீ பிரசாத்தும், கண்ணும் கண்ணும்... பாடலை மணி ஷர்மாவும், மற்ற பாடல்களுக்கு தீனாவும் இசையமைத்தனர். இப்படம் தெலுங்கில், அன்னவரம்; கன்னடத்தில் தங்கிகாகி என்ற பெயரில், ரீமேக் செய்யப்பட்டது.
திருப்பாச்சி அரிவாளை நன்கு தீட்டியிருந்தனர்!