துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
படம் : பார்த்திபன் கனவு
வெளியான ஆண்டு : 2003
நடிகர்கள் : ஸ்ரீகாந்த், சினேகா, மணிவண்ணன், விவேக்
இயக்கம் : கரு.பழனியப்பன்
தயாரிப்பு : சத்யஜோதி பிலிம்ஸ்
கல்கி எழுதிய, 'பார்த்திபன் கனவு' நாவல், 1960ல் அதே பெயரில் படமாக வெளியானது. 2003ல், அதே தலைப்பில் படம் வெளியானது; ஆனால், கதை வேறு! கரு.பழனியப்பனின் முதல் படம் இது. அவர், திரையில் உலவ செய்த பெண் கதாபாத்திரங்கள், தனித்துவம் ஓங்கி தென்பட்டனர்.
ஸ்ரீகாந்த், சினேகாவை கண்டதும் காதலில் விழுகிறார். அதே நேரம், ஸ்ரீகாந்திற்கு, அவரது பெற்றோர் பார்த்திருக்கும் பெண்ணாக, சினேகா இருக்கிறார். இதனால் மகிழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளும் ஸ்ரீகாந்திற்கு, தான் காதலித்த பெண் வேறு; மனைவியாக உள்ள பெண் வேறு என்ற உண்மை தெரிய வருகிறது. உருவ ஒற்றுமையால் நடந்த குழப்பத்தால், ஸ்ரீகாந்த் தவிக்கிறார். அதன் முடிவு என்ன என்பதை, சுவாரஸ்யமாக திரைக்கதையாக்கி இருந்தார், கரு.பழனியப்பன்.
சத்யா, ஜனனி என, இரட்டை கதாபாத்திரத்தில் சினேகா அற்புதமாக நடித்திருந்தார். இக்கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தவர், ஜோதிகா. அவரின் கால்ஷீட் கிடைக்காததால், சினேகா நடித்தார். இப்படம், தமிழக அரசின், ஏழு விருதுகளை பெற்றது.
வித்யாசாகர் இசையில், 'கனாக் கண்டேனடி, தீராத தம் வேண்டும், பக் பக் நெஞ்சில் மாடப்புறா, என்ன தவம் செய்தனை, ஆலங்குயில், வாடி மச்சினியே...' பாடல்கள் ரசிக்க வைத்தன. ஒவ்வொரு வார்த்தைக்கும், பாடல் மூலம் விளக்கம்; மூன்று கால கட்டத்தில் நிகழும் நடனம் என, பாடல் படமாக்கப்பட்ட விதமும் வெகுவாக ரசிக்கப்பட்டது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படம், அம்மாயி பாகுந்தி என, தெலுங்கில், 'ரீமேக்' செய்யப்பட்டது. மஞ்சு பெய்யும் முன்பே எனும் பெயரில், மலையாளத்தில், மொழிமாற்றம் செய்யப்பட்டது.
வாழ்க்கையை புரிந்து கொள்ள செய்தது, பார்த்திபன் கனவு!