கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்க மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
தலிபான் அமைப்புடன் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை ஒப்பிட்டுப் பேசிய பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம், என, மஹாராஷ்டிர மாநில பா.ஜ., - எம்.எல்.ஏ., ராம் கடம் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
பிரபல எழுத்தாளரும், பாலிவுட் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர், நேற்று முன்தினம் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலகம் முழுதும் உள்ள வலதுசாரி அமைப்புகளுக்கு ஒரே விஷயம் தான் இலக்காக இருக்கும். உதாரணத்திற்கு தலிபான் பயங்கரவாத அமைப்பை எடுத்துக் கொள்ளுங்கள். தலிபானுக்கு இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்பது இலக்கு. அதேபோல் ஹிந்துக்களுக்கான நாட்டை உருவாக்க வேண்டும் என, இங்கு சிலர் எண்ணுகின்றனர். தலிபான் அமைப்பினர் கொடூரமானவர்கள்; அவர்களது செயல்கள் கண்டிக்கத்தக்க வகையில் இருக்கும். அதேபோல் தான் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகளை ஆதரிப்போரும் இருப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, மஹாராஷ்டிர எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., செய்தித் தொடர்பாளருமான ராம் கடம் கூறியதாவது:சங் பரிவார் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கொள்கைகளை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஜாவேத் அக்தரின் கருத்து, வலியையும், அவமதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு கூறுவதற்கு முன், நம் நாட்டில் ஆட்சி புரிவது இதே கொள்கையை பின்பற்றுவோர் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். தலிபான் கொள்கையை பின்பற்றுவோர் ஆட்சி புரிந்திருந்தால், இது போன்ற அறிக்கையை அவர் வெளியிட்டிருப்பாரா?தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் வரை, அவர் பணிபுரியும் எந்தவொரு படத்தையும் திரையிட நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.