ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சுவரா பாஸ்கர். இவர் தனுஷ் நடித்த ராஞ்சனா, கங்கனா ரணாவத், மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
சுவரா பாஸ்கர், எப்போதுமே துணிச்சலாக தனது சர்ச்சை கருத்துகளை வெளிப்படுத்துபவர். தனது அதிரடி கருத்துக்களால் அவ்வப்போது செய்திகளில் இடம்பிடிப்பார். தற்போது அவர் தெரிவித்த கருத்து ஒன்று சமூகவலைதளங்களில் அவருக்கு எதிராக கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக சுவரா பாஸ்கரை கைது செய்யக் கோரும் பதிவுகள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது.
இந்த சர்ச்சைக்கு காரணம் சுவரா பாஸ்கரின் டுவீட். அதில், "தலிபான் தீவிரவாதிகளின் அட்டகாசம் ஆப்கானிஸ்தானில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது. அதேபோல் இந்தியாவில் இந்துவா தீவிரவாதமும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது" என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்துத்துவ தீவிரவாதத்தைப் பொறுத்துக்கொண்டிருக்கும் நாம், தாலிபனில் நடக்கும் தீவிரவாதத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறோம். நம் மனிதமும் அறமும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் அடையாளம் சார்ந்த ஒன்றாக இருக்கக்கூடாது." என்றும் கூறியிருந்தார்.
இந்தக் கருத்து வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்துத்துவா என்பதுடன் தீவிரவாதத்தை அவர் இணைத்துப் பேசியிருப்பதும், ஆப்கானிஸ்தானில் நடப்பதுதான் இந்தியாவிலும் நடக்கிறது என்று ஒப்புமைப்படுத்திப் பேசியிருப்பதும் பெரும் சர்ச்சையாகி வெடித்திருக்கிறது. அப்படி உங்களுக்கு இந்துத்துவா உடன், இந்துஸ்தானில் வசிக்க பிரச்னையாக இருந்தால் பாகிஸ்தான், வங்காளதேசம், துருக்கி, குவைத், ஈராக் போன்ற அமைதியை விரும்பும் மக்களுடன் சென்று மகிழ்ச்சியாக வாழுங்கள்" என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.