மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
தமிழில் ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ, அதையடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது புதிய படத்தை இயக்க மும்பையில் முகாமிட்டுள்ளார். இந்த படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் அட்லீ, தற்போது ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியிருக்கிறார்.
அதோடு இப்படத்தில் நயன்தாராவை ஷாரூக்கானுக்கு ஜோடியாக்கியுள்ள அட்லீ, இதுவரை தான் இயக்கிய படங்களை விட பிரமாண்டமாக இயக்குகிறாராம். குறிப்பாக, சண்டை காட்சிகளுக்கு சில ஹாலிவுட் கலைஞர்களை வரவழைக்கிறாராம். அதன்காரணமாக இப்படத்திற்கு ரூ. 200 கோடி பட்ஜெட் போட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.