சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தமிழில் ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ, அதையடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது புதிய படத்தை இயக்க மும்பையில் முகாமிட்டுள்ளார். இந்த படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் அட்லீ, தற்போது ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியிருக்கிறார்.
அதோடு இப்படத்தில் நயன்தாராவை ஷாரூக்கானுக்கு ஜோடியாக்கியுள்ள அட்லீ, இதுவரை தான் இயக்கிய படங்களை விட பிரமாண்டமாக இயக்குகிறாராம். குறிப்பாக, சண்டை காட்சிகளுக்கு சில ஹாலிவுட் கலைஞர்களை வரவழைக்கிறாராம். அதன்காரணமாக இப்படத்திற்கு ரூ. 200 கோடி பட்ஜெட் போட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.