மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மும்பை: என் கணவர் அப்பாவி; ஆபாச படங்கள் தயாரிப்புக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை, என, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கிய ஷில்பா ஷெட்டி, தமிழில் குஷி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் ராஜ் குந்த்ரா; தொழில் அதிபர். சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஆபாச படங்களில் நடிக்க வைத்து, அவற்றை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து, கோடி கோடியாய் பணம் சம்பாதித்த புகாரில் ராஜ் குந்த்ரா உட்பட 11 பேரை, மும்பை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில் ஆபாச படங்கள் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து ஷில்பா ஷெட்டியிடம் போலீசார் நேற்று விசாரித்தனர். அப்போது அவர், என் கணவர் அப்பாவி; ஆபாச படம் தயாரிப்பில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆபாச படம் வெளியிடப்பட்ட செயலியை பிரிட்டனில் உள்ள என் கணவரின் மைத்துனர் பிரதீப் பக் ஷி தான் நடத்தி வந்தார். ஆபாச செயலியின் உள்ளடக்கங்கள் குறித்த விபரங்கள் எதுவும் எனக்கு தெரியாது, என்றார்.