மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
ஓவர் நைட் பாப்புலர் என்பார்களே அது மாதிரி அர்ஜூன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தவர் ஷாலினி பாண்டே. தன்பிறகு மேரி நிம்மோ என்ற இந்தி படத்தில் நடித்தார்.
அடுத்த படமே பாலிவுட்டா என்ற எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். ஆனால் அந்த படம் வெற்றி பெறாதது ஷாலினிக்கு பின்னடைவை தந்தது. தமிழில் 100 பிரசண்ட் காதல் படத்தில் நடித்தார். அதுவும் கைகொடுக்கவில்லை. மேலும் சில படங்களில் நடித்தார்.
இப்போது மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்பி இருக்கிறார். ஏற்கெனவே ஜெயேஷ்பதி ஜோர்தார் படத்தில் நடித்து முடித்துள்ள அவர் தற்போது ஆமீர்கானின மகன் ஜுனைத் கான் அறிமுகமாகும் மகாராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சித்தார்த் மல்ஹோத்ரா இயக்குகிறார். 1982ம் ஆண்டு நடந்த பிரிஜ்நாத்ஜி மகராஜ் வழக்கை மையமாக கொண்டு இந்த படம் தயாராகிறது. இதில் ஜுனைத் கான் பத்திரிகையாளராக நடிக்கிறார்.
மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் முடிந்திருக்கிறது. ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.