என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பாலிவுட் நடிகைகளில் பரபரப்புக்கு பெயர் போனவர் நடிகை கங்கனா ரணவத். தொடர்ந்து, எதை பற்றியாவது அதிரடியான கருத்துக்களை கூறி வரும் கங்கனா, பிஸியாக நடித்து வருபவர் என்பதால் அதிக அளவு வருமான வரி செலுத்துபவர்களின் பட்டியலில் இருக்கிறார்.. ஆனால் கடந்த வருடத்திற்காக தான் செலுத்த வேண்டிய வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “என்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை வரியாக செலுத்தும் அளவுக்கு மிக அதிக அளவில் வரி செலுத்துபவர்கள் பிரிவில் நான் இருந்தும், அதிக அளவு வரி செலுத்தும் நடிகையாக இருந்தும் கூட, வேலை இல்லாத காரணத்தால் கடந்த வருடத்தில் என்னுடைய வரித்தொகையில் பாதிக்கு மேல் செலுத்த முடியவில்லை. இப்படி நடப்பது என் வாழ்க்கையில் இதுதான் முதல் தடவை” என கூறியுள்ளார். மேலும் வரி பாக்கி கட்ட வேண்டியவர்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் மாற்றியமைத்திருப்பது குறித்து வரவேற்பும் தெரிவித்துள்ளார் கங்கனா.